டெல்லி வன்முறையில் கொல்லப்பட்ட புலனாய்வுப் பிரிவு அதிகாரியின் குடும்பத்திற்கு முதல்வர் கெஜ்ரிவால் அரசு ரூ .1 கோடி இழப்பீடு அறிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கிடையே கடந்த வாரம் நடந்த மோதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 46ஆக அதிகரித்துள்ளது. போராட்டத்தில் நடந்த மோதல் கலவரமாகி, பொதுச் சொத்துகள், தனியார் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டன. அதேபோல வீடுகள், கடைகள் சேதப்படுத்தப்பட்டன. இதையடுத்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார், துணை ராணுவப் படையினர் களத்தில் இறங்கியதையடுத்து […]
