சென்னையை சேர்ந்த ஐயப்ப பக்தர் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு நேற்று அங்கப்பிரதட்சணம் செய்து சென்றுள்ளார். பம்பையில் இருந்து சபரிமலை சன்னிதானத்திற்கு செல்ல 2 பாதைகள் இருக்கிறது. அந்த பாதைகள் 5 கிலோமீட்டருக்கு மேல் தூரம் இருக்கும். அந்தப் பாதை மிகவும் கரடு முரடாக இருக்கும். இந்நிலையில் சென்னையை சேர்ந்த ஆனந்த் பத்மநாபன் என்ற ஐயப்ப பக்தர் தன்னுடைய மகனுடன் சபரிமலைக்கு வந்தார். நேற்று முன்தினம் பம்பையிலிருந்து அங்கப்பிரதட்சணம் செய்தபடி சன்னிதானத்தை நோக்கி சென்றார். அவருக்குப் பின் ஏராளமான […]
