கனடாவில் வசிக்கும் தமிழர் ஒருவர் காணாமல் போனதால் அவர் குறித்த தகவல்களை யாராவது அறிந்திருந்தால் போலீசாரிடம் வந்து தெரிவிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கனடாவைச் சேர்ந்த தமிழரான 56 வயதுடைய ராஜதுரை கஜேந்திரன் என்ற நபர் கடந்த 14ஆம் தேதி மாலை 5.30மணிக்கு காணாமல் போனார். அதன் பிறகு இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர் கடைசியாக கென்னடி எக்ளிண்டன் அவே இ என்ற பகுதியில் இருந்துள்ளார். இந்நிலையில் அவரது அங்க அடையாளங்கள் சிலவற்றை போலீசார் வெளியிட்டுள்ளனர். அதில், […]
