ஆக்கிரமிப்பு நிலத்தை அகற்ற வந்த காவல்துறையினரிடம் பெண் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் கல்யாண குப்பம் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தில் உள்ள ஏரியில் உபரி நீர் கால்வாய் மூலம் வெளியேற்றபட்டு வந்தது. இந்நிலையில் கால்வாயில் ஆக்கிரமிப்பு நிலங்கள் உள்ளதால் நீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்துள்ளனர். அப்போது அவர்களை பணி செய்ய விடாமல் அதே கிராமத்தில் வசித்து வரும் சாந்தி […]
