ஈரோடு மாவட்டத்தில் உள்ள 30 கடைகளின் ஆக்கிரமிப்புகளை போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினார்கள். ஈரோடு மாவட்டத்திலுள்ள சூரம்பட்டி நால்ரோடுலிருந்து சூரம்பட்டிவலசுக்கு செல்லும் எஸ்.கே.சி.ரோட்டின் ஓரமாக சாக்கடை செல்கின்ற நிலையில் இதன் மீது கடைக்காரர்கள் கான்கிரீட் அமைத்து இருப்பதால் சாக்கடையை தூர்வார முடியாமல் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகின்றது. மேலும் மழை பெய்யும் பொழுது மழைநீருடன் கழிவுநீரும் சாலையில் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதனால் சாலையோரமாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் […]
