சிவகளை அகழாய்வு பணியில் முதல்முறையாக தங்க பொருள் கண்டுபிடிக்கப்பட்டதால் ஆய்வாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிவகளையில் மாநில அரசு சார்பில் கடந்த 2 வருடமாக அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த வருடம் கடந்த மார்ச் மாத இறுதியில் 3-ஆம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கியது. இந்நிலையில் சிவகளை பரம்பு, ஸ்ரீமூலக்கரை பகுதியில் இறந்தவர்களை அடக்கம் செய்த இடத்தையும், ஸ்ரீ பராக்கிரமபாண்டி திரடு, பொட்டல்கோட்டை பகுதிகளில் முன்னோர்கள் வாழ்ந்த இடத்தை கண்டறியவும் பணிகள் நடைபெற்று வருகிறது. […]
