பொதுமக்கள் திடீரெனபோராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரம் அருகே சிட்லபாக்கம் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் 400-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள வீடுகள் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆக்கிரமிப்பு பகுதிகளில் கட்டப்பட்டுள்ள வீடுகளை உடனடியாக அகற்றுமாறு உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு வீடுகளை உடனடியாக காலி செய்யுமாறு […]
