அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போது பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம் நகராட்சிக்குட்பட்ட சில பகுதிகளில் 161 வீடுகள் மற்றும் கடைகள் போன்றவைகள் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின் படி தாசில்தார், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரத்துடன் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக சென்றனர். இந்நிலையில் முல்லா நகர் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகள் மற்றும் […]
