டி20 உலக கோப்பை தொடரில் இலங்கை அணிக்கெதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து 26 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டி20 உலக கோப்பை தொடரில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை-இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது .இதில் அதிரடியாக விளையாடிய ஜாஸ் பட்லர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் சதம் அடித்து அசத்தினார். கேப்டன் மார்கன் 40 ரன் எடுத்தார். இலங்கை அணி சார்பில் ஹசரங்கா 3 விக்கெட் கைப்பற்றினார்.
இதன்பிறகு 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி விளையாடியது. ஆனால் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது .இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இதில் அதிகபட்சமாக ஹசரங்கா 34 ரன்னும், ராஜபக்ச, ஷனகா ஆகியோர் 26 ரன்னும் குவித்தனர் . இறுதியாக இலங்கை அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 137 ரன் எடுத்து தோல்வியடைந்தது . இதன் மூலம் இலங்கை அணி 4-வது வெற்றியை பதிவு செய்தது.