20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டத்தில் பங்களாதேஷ் அணியை ஸ்ரீலங்கா அணி 5விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் சூப்பர் 12 ஆட்டத்தின் இன்றைய போட்டியில் வங்கதேசம் – ஸ்ரீலங்கா அணியோடு மோதியது. டாஸ் வென்ற ஸ்ரீலங்கா பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கியவங்களாதேசம் 171 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக அந்த அணியின் முகமது நைம் 62 ரன்களும், முஷிபிகுர் ரஹீம்* 57 ரன்களும் குவித்தனர்.
பின்னர் 172 எடுத்தால் வெற்றி என்ற களமிறங்கிய இலங்கை அணி 7 பந்துகள் மிச்சமிருக்க 5 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்றது. இலங்கை அணியில் அதிகபட்சமாக அசலங்கா ஆட்டமிழக்காமல் 80 ரன் குவிக்க, ராஜபக்சே 53 ரன் குவித்தனர்.
இந்த ஆட்டத்தில் வங்காளதேசம் அணி முதலில் ஆடி அற்புதமான ரன்கள் எடுத்தும் வெற்றி பெற முடியாமல் போனது அந்த அணி ரசிகர்களை நிலைகுலைய வைத்துள்ளது. வங்கதேசம் அணியின் தோல்வியை தாங்க முடியாமல் ரசிகர்கள் கண்ணீர் விட்டு அழுத நிகழ்வு பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.