பிரதமர் மோடி டார்ச் அடிக்க சொன்னது குறித்து கமல்ஹாசன் பதிவிட்ட கருத்துக்கு பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர் பதிலளித்துள்ளார்.
பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களிடம் வீடியோ காணொளியில் உரையாற்றும் போது, ஏப்ரல் 5 ஆம் தேதி (நாளை) இரவு 9 மணிக்கு அனைவரும் 9 நிமிடம் விளக்கை அணைத்து விட்டு டார்ச், அடிக்க வேண்டும் அல்லது அகல் விளக்குகள், மெழுகுவர்த்தி ஏற்றி ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும் என மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இது குறித்து பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டரில் பக்கத்தில் கருத்து தெரிவித்தார். அதில், பிரதமர் பேசுகிறார் என்றதும் நான் அதிகம் எதிர்பார்த்தேன். பாதுகாப்புக்கவசங்கள் தட்டுப்பாடுக்கான தீர்வு, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி விநியோகம், ஏழைமக்களின் வாழ்வாதாரம், வருங்கால பொருளாதார நடவடிக்கை என, ஆனால் நாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார்.
கமலின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் கமலின் கருத்துக்கு நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சில சமயம் நம்ம படத்துல அதிகம் எதிர்பார்த்து ஏமாந்தது மாதிரி இல்ல இது. வெறும் டார்ச்லைட் கையில இருந்தா போதாது. அது பிரகாசமா எரிய பாட்டரி தேவை. அதுதான் நம் பிரதமர். இந்த 21 நாள் தேசத்திற்கே ஊரடங்கு. இதில் அரசியல் எதற்கு? உங்கள் ஆலோசனைகளை பிரதமரிடமே தெரிவிக்கலாமே” என்று பதிவிட்டுள்ளார்.
சில சமயம் நம்ம படத்துல அதிகம் எதிர்பார்த்து ஏமாந்தது மாதிரி இல்ல இது. வெறும் டார்ச்லைட் கையில இருந்தா போதாது. அது பிரகாசமா எரிய பாட்டரி தேவை. அதுதான் நம் பிரதமர். இந்த 21 நாள் தேசத்திற்கே ஊரடங்கு. இதில் அரசியல் எதற்கு⁉️உங்கள் ஆலோசனைகளை பிரதமரிடமே தெரிவிக்கலாமே.@narendramodi https://t.co/jqBEdnW2Gf
— S.VE.SHEKHER🇮🇳 (@SVESHEKHER) April 4, 2020