Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யா- ஜோதிகாவுக்காக கதை தயார் செய்யும் பிரபல பெண் இயக்குனர்… வெளியான சூப்பர் தகவல்…!!!

சூர்யா- ஜோதிகா மீண்டும் இணைந்து நடிப்பதற்காக பிரபல பெண் இயக்குனர் கதை தயார் செய்து வருகிறார் .

தமிழ் திரையுலகில்  நட்சத்திர தம்பதிகளாக வலம் வரும் சூர்யா-ஜோதிகா கடைசியாக இணைந்து நடித்த படம் ‘சில்லுனு ஒரு காதல்’ . கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இதையடுத்து அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் . திருமணத்திற்கு பிறகு சூர்யா -ஜோதிகா  இணைந்து நடிக்கவில்லை ‌.

ஹலீதா ஷமீம்

இந்நிலையில் சில்லுக்கருப்படி பட இயக்குனர் ஹலிதா சமீம் ,சூர்யா-ஜோதிகா மீண்டும் இணைந்து நடிப்பதற்கான ஒரு கதையை தயார் செய்து வருவதாக  தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ‘சில்லுக்கருப்பட்டி படத்தின் 50வது நாள் வெற்றியை சூர்யா வீட்டில் கொண்டாடிய போது தான் அவர்கள் இருவரையும் ஒன்றாக சந்தித்தேன் . அப்போது நாங்க சேர்ந்து நடிப்பதற்கு கதை தயார் செய்யுங்கள் என்று சூர்யா சார் என்னிடம் சொன்னார் . தற்போது அவர்களுக்காக ஒரு ஸ்கிரிப்ட் எழுதி வருகிறேன் . விரைவில் அதை முடித்து விடுவேன்’ என்று கூறியுள்ளார் .

Categories

Tech |