Categories
கல்வி சினிமா சென்னை தமிழ் சினிமா

கல்விக்கு சூர்யா…. விவசாயத்திற்கு கார்த்தி…. கோடிகளின் அடையாளம் அல்ல எங்கள் குடும்பம்….. நடிகர் சிவகுமார் பேச்சு…!!

சென்னை சோழிங்கநல்லூர் சத்தியபாமா கல்லூரி வளாகத்தில் அகரம் அறக்கட்டளை  நிகழ்வில் நடிகர் சிவகுமார் அவரது மகன்களின் அடையாளம் குறித்து பேசினார்.

சென்னை சோழிங்கநல்லூர் சத்தியபாமா கல்லூரி வளாகத்தில் அகரம் அறக்கட்டளை பத்தாண்டுகளாக கடந்து வந்த பாதை என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்வில் நடிகர் சூர்யா., அவரது தந்தை சிவகுமார், அவரது சகோதரர்கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிர்வாகிகள் மற்றும் அறக்கட்டளையின் பயின்றுவரும் மாணவர்கள் 3000 பேரும் நிகழ்வில் பங்கேற்றனர்.

முதலாவதாக பேசிய சிவகுமார் எத்தனை படங்கள் நடித்து கோடி கோடியாக சம்பாதித்தாலும் அகரம் தான் சூர்யாவின் அடையாளம் என்றும், உழவன் பவுண்டேஷன் தான் கார்த்தியின் அடையாளம் என்றும் கூறினார். சிவக்குமாரை தொடர்ந்து பேசிய கார்த்தி, தன்னை மற்றவரோடு  ஒப்பிடும் தவறான பழக்கம் எனக்கு இருந்தது என்றும், அது தவறானது அப்படி இருக்கக் கூடாது என்றும், நாம் யாரை விடவும் உயர்ந்தவர்களோ தாழ்ந்தவர்களோ இல்லை ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள் என்றும் கூறினார். 

Categories

Tech |