Categories
Uncategorized தேசிய செய்திகள்

BREAKING :நிர்பயா வழக்கு- 2 குற்றவாளிகளின் மறுசீராய்வு மனுக்கள்  தள்ளுபடி – உச்ச நீதிமன்றம் அதிரடி

நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனையை எதிர்த்து 2 குற்றவாளிகள் தாக்கல் செய்திருந்த மறுசீராய்வு மனுக்களை  தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம். இதன்மூலம் அவர்கள் திட்டமிட்டபடி தூக்கிலிடப்படுவது உறுதியாகிவிட்டது.

2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைதான ஆறு நபர்களில் ஒருவர் மைனர் என்பதால் விடுதலை செய்யப்பட்டார்.

திகார் சிறையிலிருந்த மற்றொருவரான ராம்சிங் 2013ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். எஞ்சியுள்ள நால்வரான முகேஷ், பவன் குப்தா, வினய் ஷர்மா, அக்‌ஷய் குமார் ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது.

குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.இதனையடுத்து, டெல்லி ஐகோர்ட்  4 குற்றவாளிகளையும் வருகிற 22-ந்தேதி காலை 7 மணிக்கு தூக்கில் போட  உத்தரவிட்டது. இதையடுத்து, திகார் சிறையில் அவர்களை தூக்கிலிடுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

இதற்கிடையே குற்றவாளிகளான  வினய்குமார் சர்மா மற்றும் முகேஷ் சிங் இருவரும் தூக்கு தண்டனையை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்தனர். குற்றவாளிகளுக்கான கடைசி சட்ட வாய்ப்பு இதுவாகும்.

இந்த மறுசீராய்வு மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் இன்று நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது, இந்த வழக்கில் தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வாய்ப்பில்லை  எனக்கூறி, மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இதனால் குற்றவாளிகள் வரும் 22-ம் தேதி தூக்கிலிடப்படுவது உறுதியாகிவிட்டது.

 

Categories

Tech |