நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனிடையே அலைவரைப் போலவும் ஏழை எளிய மக்கள் தீபாவளியை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் மகாராஷ்டிரா அரசு 100 ரூபாய் மதிப்புள்ள சிறப்பு தொகுப்பை ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.இந்த திட்டத்திற்காக அந்த மாநிலத்தில் சுமார் 513 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் 1.5 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் இதில் பயன்பெற உள்ளனர்.
மேலும் மகாராஷ்டிரா அரசு மூன்றாம் பாலினத்தவருக்கும் எளிய முறையில் ரேஷன் கார்டு பெரும் வகையில் சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இதற்காக அவர்கள் வாக்காளர் அடையாள அட்டை மட்டும் வைத்திருந்தால் போதும்.அரசின் இந்த அறிவிப்பால் அந்த மாநிலத்தில் உள்ள ஐம்பது சதவீதம் மூன்றாம் பாலினத்தவர்கள் ரேஷன் கார்டுகளை விரைவில் பெறுவார்கள் என கூறப்படுகிறது.இந்நிலையில் மகாராஷ்டிரா அரசின் தீபாவளி சிறப்பு தொகுப்பு அறிவிப்பாள் மற்ற மாநில அரசுகளும் மக்களுக்கு தீபாவளி சிறப்பு அறிவிப்பை வெளியிடுமா என்று மிகுந்த எதிர்பார்ப்பில் மக்கள் அனைவரும் காத்திருக்கின்றனர்.