பஞ்சாப் நேஷனல் வங்கி பண்டிகைக்கால சலுகைகளை மார்ச் மாதம் வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் இரண்டாவது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “PNB New Year Bonanza 2021 திட்டத்தின் கீழ் அனைத்து புதிய வீட்டுக் கடன, டேக் ஓவர் வீட்டுக் கடன், கார் கடன், சொத்துக் கடன்களுக்கு பிராசஸிங் கட்டணம் மற்றும் டாகுமெண்டேஷன் கட்டணங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும்” என்று அறிவித்துள்ளது. முதலில் பண்டிகைக்கால சலுகை திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டது.
இதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியி நல்ல வரவேற்பு கிடைத்ததால் மேலும் இத்திட்டம் மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்ப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பஞ்சாப் நேஷனல் வங்கியின் சில்லறைக் கடன் வளர்ச்சி மேற்கொண்டு ஏற்றம் அடையும். மார்க்கெட்டில் பண்டிகைக்காலத்தில் எழுந்துள்ள டிமாண்ட் மற்றும் வாய்ப்புகளை கைப்பற்றுவதற்கு இந்த சலுகை திட்டம் உதவியாக இருக்கும்.எனவே வீட்டு கடன், கார் கடன், சொத்துக் கடன் வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு இது ஒரு சூப்பர் வாய்ப்பு.
ஏனெனில் நாம் கடன் வாங்கும்போது பிராசஸிங் கட்டணம், டாகுமெண்டேஷன் கட்டணம் என கூடுதலாக நிறைய செலவுகள் ஆகின்றன. இவை ரத்து செய்யப்படுவதால் நமக்கு அந்த செலவுகள் ஏற்படாது. எனவே இந்த சமயத்தை சரியாக பயன்படுத்துவது நல்லது. ஏற்கெனவே வேறு வங்கிகளில் வீட்டுக் கடன் வாங்கியிருப்பர்களும், இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு கடனை மாற்றி கொள்ளலாம். இதற்கும் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படாது.