ரஷ்யாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது சூட்கேஸை திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.
உலகில் ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்வதுதான் நடைமுறை. அறிவியல் ரீதியாக அது தான் பெரும்பாலான மக்களுக்கு நடக்கிறது. சமீபத்தில் ஓரினசேர்க்கை திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. அவர்களின் உரிமைக்காக, இன்று அமைப்புகள் ஏற்படுத்தி குரலெழுப்பி வருகின்றனர். உலகம் இப்படி வளர்ந்து கொண்டிருக்கையில் ரஷ்யாவை சேர்ந்த பெண் ஒருவர் வித்தியாசமாக சூட்கேஸ் மீது காதல் வந்துவிட்டதாம். ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள என்ற பகுதியை சேர்ந்த 24 வயது பெண் ரெயின் கோர்டன்.
இவருக்கு ஒரு வித்தியாசமான உணர்வு இருக்கிறதாம். அது என்னவென்றால் உணர்வு இருப்பவர்களுக்கு அசையாத பொருளின்மீது ஏற்படும் ஆசை. உதாரணத்திற்கு தான் வைத்திருக்கும் செல்போன், தனது உடை, கைப்பை என உயிரற்ற பொருட்களின் மீதுதான் காதல் வரும். ரெயின் கோர்டன் 2015ஆம் ஆண்டு தனக்கென ஒரு சூட்கேஸ் ஒன்றை வாங்கியுள்ளார். சூட்கேஸ் அவர் வாங்கும் போதே அவருக்கு அது பிடித்து விட்டது. மிகவும் ஆசையுடன் தான் அந்த சூட்கேசை வாங்கியுள்ளார்.
அதற்கு கிடியான் என பெயர் வைத்துள்ளதாகவும், கடந்த ஜூலை மாதம் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறுகிறார். இதுகுறித்து அவர் கூறும்போது: எங்களுக்குள் ஒரு டெலிபதி இருக்கிறது. அதனால் நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம். இது வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தெரியாது. கிடியான் எனக்கு ஒரு நல்ல கணவனாகவும், நல்ல நண்பனாகவும், நல்ல அறிவுரையாளனாகவும் இருக்கிறார்.
என்னைப் பற்றி நன்றாக புரிந்து வைத்திருக்கிறார். ஒரு சூட்கேஸ், பெண்ணை திருமணம் செய்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது. அண்மையில் கஜகஸ்தான் சேர்ந்த பாடிபில்டர் ஒருவர் பாலியல் பொம்மையை திருமணம் செய்துகொண்டு சம்பவத்தை, இந்த சம்பவம் மிஞ்சி விட்டது என்று கூற வேண்டும்.