Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

எனக்கு ரொம்ப பயமா இருக்கு…. காதல் மனைவி தற்கொலை…. உறவினர் வீட்டில் வாலிபர் செய்த செயல்…!!

காதல் மனைவி தற்கொலை செய்து கொண்டதால் காவல்துறையினர் விசாரணைக்கு பயந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள களிஞ்சிகுப்பம் பகுதியில் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கடலூர் மாவட்டத்தில் உள்ள பாபுகுளம் பகுதியில் வசிக்கும் நந்தினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் அவர்களது வீட்டில் கட்டிட வேலை செய்தவர்களுக்கு டீ போட்டு கொடுக்குமாறு ரவிகுமார் நந்தினியிடம் கூறியதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் மனமுடைந்த நந்தினி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்துள்ளார்.

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இச்சம்பவம் குறித்து வளவனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் ரவிக்குமார் காவல்துறையினரின் விசாரணைக்கு பயந்து கீழ் குமார மங்கலம் பகுதியில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார். அப்போது இரவு நேரத்தில் உறவினரின் வீட்டு மாடியில் ரவிக்குமார் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து ரெட்டிசாவடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |