Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“கடன் தொல்லை “வீடியோ காலில் கணவன்… கதறிய மனைவி… போலீஸ் கொடுத்த தகவல்…!!

கடன் தொல்லையால் லாரி ட்ரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது

அரியலூர் மாவட்டத்திலுள்ள  ஆமணக்கந்தோன்டி கிராமத்தில் கார்மேகம் என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் லாரி ட்ரைவர் . இவருக்கு திருமணமாகி கௌசல்யா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில்  கார்மேகம் வேலைக்கு சென்றால் 10 அல்லது 15 நாட்கள் கழித்த பின்பே வீட்டிற்கு வருவது வழக்கம். இதனை தொடர்ந்து கடந்த 10 நாட்களுக்கு முன்பே வேலைக்கு சென்றவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கௌசல்யாவிடம்  வீடியோ காலில் பேசியுள்ளார்.

அப்போது  அவர், தான்  பெரியபாலத்தில் இருப்பதாகவும், தனக்கு கடன் தொல்லை அதிகம் உள்ளதால் விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொள்ள போவதாகவும் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கௌசல்யா உறவினர்களிடம் இது பற்றிக் கூறி அவரை தேடி வந்தனர். கார்மேகத்தின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்ததால்  அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.இதனை தொடர்ந்து நேற்று காலை  பெரிய பாலம் அருகே தைலமரக்காடு பகுதியில் ஆடு  மேய்த்து கொண்டிருந்தவர்கள் ,அப்பகுதியில் ஆண் ஒருவர் இறந்து கிடந்ததை கண்டு ,காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

தகவல் அறிந்த காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது அவரது  உடல் அழுகிய நிலையில் கிடந்தது.அவருடைய பையில்இருந்த  ஓட்டுனர் உரிமத்தை எடுத்து அதில் இருக்கும் முகவரிக்கு காவல் துறையினர் தகவல் தெரிவித்தனர்.  மேலும்  போலீசார் அவரது உடலை  பிரேத பரிசோதனைக்காக  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு  வழக்குப்பதிந்து  விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |