Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தாயின் கண்டிப்பு… மகன் எடுத்த முடிவு… காத்திருந்த அதிர்ச்சி…!!

தாய் கண்டித்ததால் மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள குளத்தூர் பகுதியில் ஏழுமலை என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய மகன் ருத்ரனுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இதனால் அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததால் அவருடைய தாயார் அவரை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ருத்ரன் தனது உறவினர் வீட்டிற்கு சென்று சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ருத்ரனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |