Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சரியாக மாட்டேங்குது… ரொம்ப கஷ்டமா இருக்கு…. நெல்லையில் ஊராட்சி மன்ற தலைவி விபரீத முடிவு…!!

நெல்லையில் உடல்நலக்குறைவால் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள விஜயாபதி கிராமத்தில் சகாய பெட்லின் எஜித்தின் என்பவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் ஊராட்சி மன்ற தலைவராக பணிபுரிந்தவர். இதையடுத்து சில நாட்களாக இவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பல மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் எந்த சிகிச்சையிலும் நோய் குணமாகத்தால் சகாய பெட்லின் மன வேதனை அடைந்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கூடங்குளம் காவல்துறையினர் அவரது உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |