Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கணவனுடன் தகராறு…. பிரிந்து சென்ற மனைவி…. பின் நேர்ந்த சோகம்….!!

கணவன் மனைவி தகராறில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெம்பத்தப்பள்ளி பகுதியில் அந்தோணிசாமி என்பவர் வசித்து வந்தார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக அந்தோணிக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று கணவன், மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட அந்தோணிசாமியின் மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்த சம்பவத்தால் மனவேதனை அடைந்த விவசாயி வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அந்தோணிசாமியை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கிருந்து அவர் சேலம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைக்கு பின் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தற்கொலை குறித்து தளி காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |