கட்டிட மேஸ்திரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொன்னாகரம் பகுதியில் முனியப்பன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு பெருமாள் என்ற ஒரு மகன் இருந்துள்ளார். பெருமாளுக்கு இரண்டு பிள்ளைகளும், கமலா என்ற மனைவியும் உள்ளனர். இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் மயங்கிய நிலையில் வீட்டில் கிடந்துள்ளார்.
இதையடுத்து அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதை தெரிந்து கொண்ட அவரது குடும்பத்தினர், உறவினர்கள் உதவியுடன் சிகிச்சைக்காக பொன்னாகரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் அங்கிருந்து தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அவர் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பொன்னாகரம் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.