Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஐயோ இனிமேல் நான் என்ன பண்ண போறேன்… எதுவுமே சரியாய் அமையல… விரக்தியில் வாலிபர் எடுத்த முடிவு…!!

வேலை இல்லாத விரக்தியில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள பழைய டிவிஎஸ் சாலையில் மணிமாறன் என்பவர் வசித்து வந்தார். இவருடைய மகனான ராமகிருஷ்ணன் சிறுவயதாக இருக்கும்போதே அவரது தாய் இறந்துவிட்டார். இவரது தந்தையான மணிமாறன் இவரை விட்டுப் பிரிந்து சென்றுள்ளார். இதனால் அந்த பகுதியில் இருக்கும் தனது அத்தை சாவித்திரியின் வீட்டில் ராமகிருஷ்ணன் வளர்ந்துள்ளார். பின்பு ராமகிருஷ்ணன் 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு பெங்களூருவில் இருக்கும் ஒரு ஆன்லைன் விற்பனை நிலையத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். பின்னர் கொரோனா ஊரடங்கு காரணமாக அவருடைய வேலை பறிபோனது.

அதன்பின் அவர் பல வேலைகளுக்கு முயற்சி செய்துள்ளார். ஆனால் வேலை கிடைக்காத காரணத்தால் ராமகிருஷ்ணன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்துள்ளார். இந்நிலையில் ராமகிருஷ்ணன் திடீரென்று தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தேனி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |