Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கேட்கவே மாட்டேங்குதே… வலியால் துடித்த வாலிபர்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

வயிற்று வலியால் அவதிப்பட்ட வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள வலங்கைமான் பகுதியில் கோபி என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த கோபி விஷம் குடித்து பாபநாசம் ரோட்டில் மயங்கி விழுந்து இறந்துள்ளார். இதனை பார்த்து அவ்வழியாக சென்றவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து  அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோபியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக வலங்கைமான் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |