Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மன உளைச்சல் தான் காரணமா….? கணவன் செய்த செயல்…. அதிர்ச்சியில் மனைவி….!!

மன உளைச்சலில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் அரசநாடு பகுதியில் சுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு  கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளது. அதனால் இவர் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதனால் அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எலி மருந்தை எடுத்து சாப்பிட்டு விட்டு மயங்கி கிடந்துள்ளார்.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலன் அளிக்காத காரணத்தினால் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து சுப்பிரமணியனின் மனைவியான கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |