Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“அழைக்கழிக்கப்படுவதை வன்மையாக கண்டிக்க வேண்டும்”…. விவசாயிகள் நல கூட்டத்தில்…. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்….!!!!

கரும்பு விவசாயிகள் நல சங்க ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கடலூர் மாவட்டத்தில் சேந்தியாத்தோப்பு என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள எம்.ஆர்.கே கூட்டுறவு சர்க்கரை ஆலையின் சங்க அலுவலகத்தில் விவசாயிகள் நல சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சங்கத் தலைவர் வி.ஜி.சிட்டிபாபு அவர்கள் தலைமை தாங்கியுள்ளார். அதோடு நிர்வாகிகள் குபேந்திரன், வையாபுரி, சங்கர், மோகன் ஆகியோர் முன்னிலை வகித்ததோடு பாலமுருகன் வரவேற்புரை ஆற்றினார்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாவது “சேந்தியாத்தோப்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் குறுவை பயிர் கடன் வழங்காமல் விவசாயிகளை அழைக்கழிப்பதை வன்மையாக கண்டிக்க வேண்டும். கால்நடை பராமரிப்பு, இடுபொருள்கள், தீவனம் போன்றவற்றை வழங்காமல் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் கரும்பு நிலுவைத் தொகை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வத்துக்கும் நன்றி தெரிவிப்பது” போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்பின் இறுதியில் சங்க உறுப்பினரான செந்தில்குமார் நன்றி உரை ஆற்றினார்.

Categories

Tech |