Categories
தேனி மாவட்ட செய்திகள்

திடீரென பிடித்த காட்டுத்தீ…. 10மணி நேரம் போராடிய வீரர்கள்… மரங்கள் அனைத்தும் தீயில் கருகி சேதம்…!!

தொடால் வனப்பகுதியில் திடீரென பற்றிய காட்டுத்தீயால் வனப்பகுதியில் உள்ள மரம் செடி கொடிகள் என முழுவதும் எரிந்து சேதமடைந்துள்ளது.

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள கழுகுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் தொடால் வனப்பகுதி உள்ளது. இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்பு மதியம் 2 மணி அளவில் திடீரென அப்பகுதியில் காட்டுத்தீ பற்றி மளமளவென எரிந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்து விரைந்து சென்ற வனச்சரகர் நாகராஜ், வனவர் நிதின், வனக்காப்பாளர் பெத்தனசாமி ஆகியோர் தலைமையில் சென்ற வன ஊழியர்கள் தீயை கட்டுபடுத்த முயன்றுள்ளனர்.

இருப்பினும் அப்பகுதியில் காற்று வீசியதால் தீ அங்கிருந்த செடி, கொடி, மரங்கள் என அனைத்தும் தீயில் எரிந்துள்ளது. இதில் சுமார் 2ஏக்கர் பரப்பளவில் இருந்த மரங்கள் என முற்றிலும் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளது. மேலும் சுமார் 10 மணி நேரம் போராடி தீயை முழுவதுமாக அணைத்துள்ளனர்.

Categories

Tech |