லாரி டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் பகுதியில் லாரி டிரைவரான சங்கரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி இருக்கிறார். இவர் அங்குள்ள ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சங்கரனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் சங்கரன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
இதனை அடுத்து தனலட்சுமி சங்கரனுக்கு தேவையான மருந்து பொருட்களை வாங்க கடைக்கு சென்றுள்ளார். அப்போது சங்கரன் தனி அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சங்கரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.