Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

குடும்ப தகராறு…. பிரிந்து சென்ற மனைவி…. விரக்தியடைந்த கணவன்…. நேர்ந்த விபரீதம்

மனைவி வீட்டை விட்டு சென்ற வருத்தத்தில் கணவர் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் ரமேஷிர்க்கும் அவரது மனைவிக்கும் கடந்த சில தினங்களாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் 16 ஆம் தேதி அன்று ஏற்பட்ட தகராறு காரணமாக ரமேஷின் மனைவி கோபம் கொண்டு திருக்கழுக்குன்றம் அருகில் இருக்கும் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். மனைவியை வீட்டை விட்டு சென்றதால் மனவேதனையுடன் இருந்த ரமேஷ் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டு மயங்கி விழுந்துள்ளார்.

இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி அளித்த பின்னர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை அளித்த பின்னரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் ரமேஷ். இதுகுறித்து கூடுவாஞ்சேரி காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |