குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிந்ததால் சீரியல் நடிகை தேம்பி அழுதுள்ளார்.
பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கனி வெற்றி அடைந்தார். இதைதொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவடைந்துள்ள நிலையில் பலரும் இந்நிகழ்ச்சியை மிஸ் செய்வதாக கூறிவருகின்றனர்.
அந்த வகையில் மௌனராகம் சீரியல் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சக்தி என்கின்ற கிரித்திகா குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிந்ததால் கண்ணீர்விட்டு தேம்பி அழுதுள்ளார். இந்த வீடியோ காட்சியை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.