கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி மர்ம மரணம் என சொல்லப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நிர்வாகிகள் ஆசிரியர்களுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கிய உத்தரவில் நீதிபதி பல்வேறு முக்கிய கருத்துக்களை பதிவு செய்தார். அதில் மாணவி மரணம் கொலையோ, பாலியல் பலாத்காரமோ அல்ல என நீதிபதி தெரிவித்திருக்கின்றார். இதில் நீதிபதி பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டியுள்ளார். அதில், ஜிப்மர் மருத்துவக் குழு அறிக்கையிலும் கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை.
மருத்துவக் குழுக்களின் இரு பிரேத பரிசோதனை அறிக்கையை சுட்டிக்காட்டி உள்ள நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.இரு பிரேத பரிசோதனை அறிக்கையையும் ஜிப்மர் குழு ஏற்றுக் கொண்டுள்ளது. பள்ளி மூன்றாவது மாடியில் இருந்தது மாணவியின் ரத்த கரையல்ல, வண்ண பூச்சி என நிபுணர்கள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவி வேதியியல் பாடம் படித்ததில் சிரமப்பட்டது உறுதியாகி உள்ளது. பெற்றோர் வைக்கும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் ஏதுமில்லை. மாணவி மாடியிலிருந்து விழும்போது மரத்தில் அடிபட்டதாலேயே காயம் என மருத்துவர் குழு தெரிவிக்கின்றது. நன்றாக படிக்க சொல்வது ஆசிரியர் பணியில் உள்ள ஒரு அங்கம், தற்கொலைக்கு தூண்டுவது அல்ல. மாணவி மரணத்திற்கு காரணம் பாலியல் பலாத்காரமோ அல்லது கொலையோ இல்லை என ஜிப்மர் மருத்துவக் குழு அறிக்கையை சுட்டிக்காட்டி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.