Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

விலையை கண்டிப்பா குறைக்கனும்… முக்குலத்து புலிகள் கட்சியினர்… 12 பேரை கைது செய்த போலீசார்…!!

திருவாரூர் மாவட்டத்தில் முக்குலத்து புலிகள் கட்சியினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் ரயில்வே மேம்பாலத்தில் முக்குலத்து புலிகள் கட்சியினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். தினந்தோறும் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்தும், அத்தியாவசிய பொருட்களில் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் இளையராஜா தலைமை தங்கியுள்ளார்.

இதனையடுத்து திருவாரூர் நகர செயலாளர் யோகானந்த், திருத்துறைப்பூண்டி நகர செயலாளர் சுரேஷ், துணை செயலாளர் வினோத் உட்பட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். மேலும் சாலைமறியலால் திருவாரூர்-தஞ்சாவூர் சாலையில் போக்குவரத்து பெரும் பாதிப்படைந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சென்ற போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் கலைத்து செல்லாததால் சாலை மறியலில் ஈடுபட்ட 12 பேரை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |