வங்கக் கடலின் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுப்பெற்று நேற்று இரவு 11:30 மணியளவில் மாண்டஸ் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயல் காரைக்காலில் இருந்து 560 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 640 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டா விற்கும் இடையில் நாளை கரையை கடக்கிறது.
இந்த மழையின் காரணமாக மணிக்கு 65 கிலோ மீட்டர் முதல் 75 கிலோமீட்டர் வரை காற்று வீசும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டதோடு கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும் எனவும் பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் இந்த கனமழையின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.