Categories
உலக செய்திகள்

“பயங்கரம்!”…. ஒன்றுடன் ஒன்று மோதிய சரக்கு கப்பல்கள்…. புயல் தாக்கத்தால் விபரீதம்…!!!

வடக்கு ஐரோப்பாவில் நேற்று உருவான புயலால் பல்வேறு பகுதிகளில் கடும் சேதம் ஏற்பட்டிருக்கிறது.

வட ஐரோப்பாவின் பல்வேறு மாகாணங்களை நேற்று முன்தினம் மாலை மாலிக் புயல் தாக்கியதில் அதிகமான வீடுகள் சேதமடைந்தது. மேலும் இதில் நான்கு நபர்கள் பலியானதாக தகவல் வெளியானது. இந்நிலையில் நேற்று கோரி புயல் உருவாகியிருக்கிறது. இந்த புயலின் தாக்கத்தால் நெதர்லாந்து நாட்டில் ஜுமுடென் என்ற துறைமுகத்தில் இருந்து 20 மைல் தூரத்தில் கடலில் நங்கூரமிட்ட சரக்கு கப்பல்கள் 2 ஒன்றின் மீது ஒன்று பலமாக மோதியது.

இதில் கப்பல்கள் இரண்டும் பலமாக சேதமடைந்தது. கப்பல்களில் பயணித்த பதினெட்டு ஊழியர்களையும் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்டனர். இந்த புயல் தாக்கத்தில் நெதர்லாந்தின் மேற்குபகுதி கடும் பாதிப்படைந்தது.

Categories

Tech |