திருச்சி அருகே திருட சென்ற இடத்தில் திடீரென்று மாரடைப்பு வந்ததால் ஒருவர் ஒருவர் பலியாகி உள்ளார்.
திருச்சி மாவட்டம், முசிறி அருகே தாத்தையங்காரர் பேட்டை பகுதியை சேர்ந்த அப்பாவு என்பவர் வீட்டில் இடம் பற்றாக்குறை காரணமாக பொருள்களை அருகிலுள்ள மற்றொரு வீட்டில் வைத்துள்ளார். இரவில் பொருள்கள் உள்ள வீட்டை பூட்டி விட்டு வழக்கம்போல் தனது வீட்டிற்கு சென்று விடுவார். இந்நிலையில் இன்று காலை பொருள்களை வைத்திருக்கும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது முதியவர் ஒருவர் உயிரிழந்து கிடந்தார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பாவு தாத்தையங்கார் பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கிருந்து தடயங்களை சேகரித்து,முதியவரை குறித்து விசாரணை நடத்தினார். அதில் முதியவர் துறையூரை சேர்ந்த சீனி வாசன் என்பது தெரியவந்தது. மேலும் சம்பவ தினத்தன்று திருட வந்த சீனிவாசன் மாரடைப்பால் அங்கேயே உயிரிழந்தார் எனவும் தெரியவந்தது. பின்னர் தொடர்ந்து சீனிவாசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருட வந்த இடத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த முதியவரின் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.