நீதிமன்ற காவலில் இருந்த ஸ்டான் சுவாமி சில நாட்களுக்கு முன்பு மரணமடைந்துள்ள நிலையில் ஐ.நாவின் நல்லிணக்க அதிகாரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வன்முறையை தூண்டியதாக கூறி ஸ்டான் சுவாமியின் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனால் நீதிமன்ற காவலிலிருந்த ஸ்டான் ஸ்வாமி உடல்நல குறைபாட்டால் சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இதற்கிடையே ஸ்டான் ஸ்வாமியை நீதிமன்ற காவலில் நடத்திய விதம் குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில் ஐ.நாவின் நல்லிணக்க அதிகாரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது மனித உரிமைகளை பாதுகாக்க போராடிய ஸ்டான் ஸ்வாமியின் உயிரிழப்பு இந்தியாவின் மனித உரிமை வரலாற்றில் ஒரு கறையாக படிந்து நீண்ட நாள் நீடிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இவரை பயங்கரவாதி போல் சித்தரித்து கதை உருவாக்கியதை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்றும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இவரது மரணம் மனித உரிமைக்காக போராடி சிறையின் பிடியில் சிக்கியிருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதை அனைத்து நாடுகளுக்கும் உணர்த்துவதாக அமைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.