Categories
உலக செய்திகள்

ஜப்பான் தங்களுக்கு நிதி உதவி அளிக்கும்…. இலங்கை அதிபர் நம்பிக்கை…!!!

இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே ஜப்பானில் இருந்து தங்களுக்கு பொருளாதார உதவி கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்திருப்பதால் மக்கள் திண்டாடி வருகிறார்கள். இந்நிலையில், அதிபர் கோட்டபாய ராஜபக்சே காணொலிக் காட்சி மூலமாக பேசியிருக்கிறார். அப்போது, அவர் தெரிவித்ததாவது தங்கள் நாட்டின் முக்கிய வளர்ச்சி கூட்டாளிகளில் ஜப்பான் முக்கிய நாடு.

இலங்கை, தற்போது சந்தித்திருக்கும் நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் விதத்தில் தகுந்த பொருளாதார உதவியை ஜப்பான் அளிக்கும் என்று நம்புகிறோம். அதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |