மதுரையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது இதில் 7 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை எஸ் ஆலங்குளம் பகுதியில் வசித்து வரும் சத்திய பிரியாவின் இரண்டாவது மகன் திருமலேஷ். இவர் கடந்த 3 நாட்களாக டெங்கு காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டு அதில் ஒரு சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மிருத்தின் ஜெயன் வயது 9, இவர் டெங்கு காய்சலால் பாதிக்கப்பட்டு, தற்போது மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.