Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அட்டகாசம் செய்யும் யானைகள்…. நியமிக்கப்பட்ட சிறப்பு குழு…. தீவிர கண்காணிப்பு பணி…!!

காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்கும் பொருட்டு சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்வதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் இருக்கின்றனர். மேலும் காட்டு யானைகள் கோழிகொல்லி, ஆனைகுளம் போன்ற பல்வேறு குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து வீடுகளை சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் சமீபத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்கும் பொருட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். அதன்படி 18 பேர் கொண்ட சிறப்பு குழுவை வனத்துறையினர் நியமித்துள்ளனர். இந்த சிறப்பு குழுவினர் காட்டு யானைகளை தீவிரமாக கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்டுவர். தற்போது சிறப்பு குழுவினர் இரவு பகலாக நாடுகாணி மற்றும் தேவாலா போன்ற பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |