உலகிலேயே மிகப் பெரிதான விண்வெளி தொலைநோக்கியானது இன்று விண்ணில் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம், கிறிஸ்துமஸ் பண்டிகையின் பரிசாக மிகப்பெரிய தொலைநோக்கியை விண்ணில் ஏவுகிறது. ஜேம்ஸ் வெப் என்ற இந்த தொலைநோக்கியானது, உலகிலேயே மிகப்பெரிய சக்தி மிகுந்த விண்வெளி அறிவியல் தொலைநோக்கியாக தயாரிக்கப்பட்டிருக்கிறது.
இத்தொலைநோக்கி, இன்று மாலை சுமார் 5:50 மணியளவில் விண்ணில் ஏவப்பட்டிருக்கிறது.
பிரெஞ்சு கயானா என்ற தென் அமெரிக்காவின் ஏவுதளத்திலிருந்து, ஏரியன் ராக்கெட்டில் இந்த தொலைநோக்கி விண்வெளிக்கு செல்லவிருக்கிறது.
இதன் மூலம், நட்சத்திரங்களும், கிரக அமைப்புகளும் எப்படி உருவாகியது? என்றும் அண்டம் தொடர்பான, தெளிவான தகவல்களையும் பெற முடியும். மேலும், நட்சத்திரங்களின் உருவாக்கம், முதல் ஒளி, விண்மீன் திரள்களின் கூட்டமைப்பு, கிரக அமைப்புகள் மற்றும் வாழ்வின் தோற்றம் போன்ற பல அரிய கேள்விகளுக்கு பதில் பெற முடியும்.
இந்த அரிய நிகழ்வை, நாசா தொலைகாட்சியில் மூலம் நேரலையாக பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.