Categories
உலக செய்திகள்

தென்ஆப்பிரிக்காவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள்.. தடுப்பூசி பற்றாக்குறை.. வெளியான தகவல்..!!

தென்னாப்பிரிக்காவில் தற்போது கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் கொரோனா தொற்று எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. இதுகுறித்து நாட்டின் சுகாதார துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த ஒரே நாளில் கொரோனா அதிகரித்திருக்கிறது. எனவே கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் நாட்டில் கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகை 6 கோடியில் தற்போது வரை 33 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் தான் அளிக்கப்பட்டுள்ளது. எனவே உலக சுகாதார நிறுவன கோவேக்ஸ் திட்டபடி, தற்போது வரை பைசர் தடுப்பூசிகள் 14 லட்சம் மற்றும் ஜான்சன் & ஜான்சன் நிறுவன தடுப்பூசிகள் 12 லட்சமும்  தென்னாப்பிரிக்காவிற்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |