சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வி.எம் சத்திரம் பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து வாலிபர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்றுள்ளனர். அப்போது சூதாட்டத்தில் ஈடுபட்ட வாலிபர்கள் காவல்துறையினரை பார்த்ததும் அங்கிருந்து தப்ப முயன்றுள்ளனர்.
ஆனால் அவர்களை மடக்கிப் பிடித்த காவல்துறையினர் 3 வாலிபர்களையும் கைது விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் இவர்கள் அதே பகுதியை சேர்ந்த முருகன், பேச்சிமுத்து, இசக்கிமுத்து என்பது தெரியவந்துள்ளது. அதன்பின் அவர்களிடமிருந்த 31 ஆயிரத்து 860 ரூபாய் பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.