தாயின் உடல் நலம் பாதிக்கப்பட்டதை கண்டு தாங்கிக்கொள்ள இயலாத மகன் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தை சேர்ந்தவர் சுபேந்திரன். கூலித் தொழிலாளியான சுபேந்திரனின் தாயாருக்கு சில தினங்களுக்கு முன்பு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் சிகிச்சை பார்த்தும் சுபேந்திரனின் தாயாருக்கு குணமாகவில்லை. இதனால் சுபேந்திரன் வருத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் தனிமையில் இருந்த சுபேந்திரன் தாயாரின் நிலையை குறித்து எண்ணி விரக்தியில் விஷம் குடித்துள்ளார். தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் சுபேந்திரனை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் மருத்துவமனை போகும் வழியிலேயே சுபேந்திரன் உயிரிழந்தார்.
இதுகுறித்து ராதாபுரம் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.