Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எப்படியாவது நிறுத்த வேண்டும்… போலீசார் அதிரடி நடவடிக்கை… ரோந்து பணியில் ஈடுபட்ட அதிகாரிகள்…!!

ராமநாதபுரத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்து 25 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் போதை பொருட்கள் மற்றும் மது விற்பனையை தடுப்பதற்கு கீழக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முனியாண்டி மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது கீழக்கரை கடற்கரை பகுதியில் சென்றபோது அதே பகுதியை சேர்ந்த ஜாஹிர் உசேன்(43) என்பவர் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தது போலீசாருக்கு தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவர் வைத்திருந்த 25 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் சீதக்காதி சாலையில் இதேபோல் புகையிலை பொருட்களை விற்பனை செய்தவரை கைது செய்த போலீசார் 15 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |