Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கொடுக்கல் வாங்கலில் தகராறு…! தம்பி மனைவி என்று பாராமல்…. கொடூரத்தை அரங்கேற்றிய ராஜகோபால்…!!

பள்ளி தாளாளர் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாக பெண் இன்ஜினியரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள இ.வி.எஸ் நகரை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி-சொர்ண பிரியா தம்பதியினர். சாப்ட்வேர் என்ஜினீயரான இவர்கள் இருவரும் பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக இவர்கள் இருவரும் திருவாரூரில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்து ஆன்லைனில் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

சுந்தரமூர்த்தியின் அண்ணன் குடும்பமான ராஜகோபால்-திவ்யா தம்பதியினர் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியை நடத்தி வருகின்றனர். ராஜகோபால் இந்தப் பள்ளியின் தாளாளர் ஆவார். இந்நிலையில் ராஜகோபால் தனது தம்பியான சுந்தரமூர்த்தியிடம் ரூபாய் 15 லட்சம் கடனாகப் பெற்றிருந்தார். இந்நிலையில் சுந்தரமூர்த்தி மனைவியான சொர்ண பிரியாவுக்கும் ராஜகோபாலுக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த ராஜகோபால் சொர்ண பிரியாவின் கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார்.

உடனே குடும்பத்தினர் சொர்ண பிரியாவை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சுந்தரமூர்த்தி திருவாரூர் டவுண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு ராஜகோபாலை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |