Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

புஸ் புஸ் என்று வந்த சத்தம்….!! அடித்துப்பிடித்து ஓடிய குடும்பத்தினர்…. தீயணைப்பு வீரர்களின் தீவிர முயற்சி….!!!

வீட்டிற்குள் புகுந்த பாம்பை தீயணைப்புதுறையினர் பத்திரமாக பிடித்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் காமராஜர் நகரில் ராமாயம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தோட்டத்து வீட்டிற்குள் பாம்பு ஒன்று புகுந்து விட்டது. இதனை பார்த்த குடும்பத்தினர் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர்.

இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படை வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு 8 அடி நீளமுள்ள சாரைப் பாம்பை பத்திரமாக பிடித்தனர். அதன்பிறகு பிடிபட்ட பாம்பு வேடசந்தூர் வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது.

Categories

Tech |