Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

காரில் இருந்த பொருள்….. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக காரில் கடத்தி வந்த மதுபானத்தைக் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் மதுக்கடத்தல் நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அதிகாரி ஜான் ஜோசப், காவல்துறை அதிகாரிகள் மஞ்சுநாதன், செல்வம் ஆகியோர் பொம்மையார்பாளையம் பகுதியில் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படி அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.

அப்போது 1.5 லட்ச ரூபாய் மதிப்பிலான 1128 மதுபான பாட்டில்கள் காரில் இருந்ததைக் காவல்துறையினர் பார்த்துள்ளனர். அதன்பிறகு காரில் வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில்  அவர்கள் சதீஷ் மற்றும் சுடர்வண்ணன் என்பது தெரியவந்துள்ளது. அதோடு அவர்கள் புதுச்சேரியிலிருந்து மரக்காணத்திற்கு மதுபான பாட்டில்களைக் கடத்தி வந்தது உறுதியாகியுள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்ததோடு அவர்களிடமிருந்த மதுபாட்டில்கள் மற்றும் காரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |