நீரில் மூழ்கி சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கீழநிறைமதி கிராமத்தில் லாரி டிரைவரான செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வராணி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு ஹாசினி, குணா என்ற இரு மகள்கள் இருந்துள்ளனர். இதனை அடுத்து செல்வராணியின் சகோதரர் குழந்தைக்கு மொட்டை போட்டு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக குடும்பத்துடன் அய்யனார் கோவிலுக்கு சென்றுள்ளனர்.
அதன் பிறகு அங்கிருக்கும் ஆற்றில் அனைவரும் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஹாசினி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஹாசினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.