அனைவருக்கும் பிடித்தமான ஒன்று என்ன என்றால் உறக்கம். படுத்த உடனே தூங்க வேண்டும் என்றுதான் அனைவரும் விருப்பப்படுவார்கள். வேலைப்பளு மற்றும் மன அழுத்தம் காரணமாக படுத்தவுடன் உறக்கம் வராது. தூக்கமே வரவில்லை என்றால் தூக்க மாத்திரையை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். இது உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும். அதற்கு பதிலாக வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து நாம் உறக்கத்தை வரவைக்கலாம். அந்த பொருள் என்ன என்றால் சீரகம் தான்.
முதலில் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு சீரகத்தை போட்டு கால் லிட்டர் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். சீரகம் கொதித்த பின்னர் நிறம் மாறிய உடன் அதனை வடிகட்டி கொள்ளவும். இரவு தூங்க செல்லும் முன்பு சாப்பிட்டு விட்டு அரைமணி நேரம் கழித்து மிதமான சூட்டில் இதை பருகி வந்தால் நல்ல தூக்கம் வரும்.அஜீரண கோளாறுகள் வாயுத் தொந்தரவுகளையும் சரி செய்யும். இதனால் நல்ல தூக்கம் கிடைக்கும்